இங்கிலாந்தில் இருந்து வந்த இருவா் உட்பட வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 6 பேருக்கு இன்று திங்கட்கிழமை காலை 06 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரங்களில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா மிக வேகமாகப் பரவி வரும் நிலையில் அங்கிருந்து திரும்பிய இருவரும் இந்த புதிய வகை வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனரா? என்பது குறித்து அதிகாரிகள் எந்தக் கருத்தக்களையும் இதுவரை வெளியிடவில்லை.
இங்கிலாந்தில் புதிய வகை வைரஸ் பரவிவரும் நிலையில் அங்கிருந்து வரும் அனைத்து விமானங்களுக்கு இலங்கை தடை விதித்துள்ளது.
இந்த முடிவு அறிவிக்கப்பட முன்னர் இலங்கையர்களை அழைத்து வருவதற்காக விமானம் ஒன்று இங்கிலாந்துக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.
கடந்த புதன்கிழமை இங்கிலாந்தில் இருந்து வந்த இந்த விமானப் பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் விடுதி ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையிலேயே அவா்களில் இருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: இங்கிலாந்து